ADDED : மே 19, 2025 05:42 AM
விருதுநகர் : விருதுநகர் காமராஜ் பொறியியல், தொழில்நுட்பக் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான நுண்கலைத் திருவிழா நடந்தது. சிறப்பு விருந்தினராக கல்லுாரி செயலாளர் தர்மராஜன் பங்கேற்றார்.
முதலாமாண்டு மாணவர்களின் பரதநாட்டியம், மேற்கத்திய நடனம், குழு நடனம், பாட்டு, நாடகம், தனிநடிப்பு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் கல்லுாரி நிர்வாகிகள், கல்லுாரி முதல்வர் செந்தில், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.