Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/அரசு மருத்துவமனையில் தேங்கிய மழை நீர் நோயாளிகள் அவதி

அரசு மருத்துவமனையில் தேங்கிய மழை நீர் நோயாளிகள் அவதி

அரசு மருத்துவமனையில் தேங்கிய மழை நீர் நோயாளிகள் அவதி

அரசு மருத்துவமனையில் தேங்கிய மழை நீர் நோயாளிகள் அவதி

ADDED : ஜன 07, 2024 03:57 AM


Google News
Latest Tamil News
சிவகாசி: சிவகாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரால் நோயாளிகள் மீண்டும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு பெரிதும் அவதிப்படுகின்றனர். மழை நீரை வெளியேற்றி, சேதமடைந்த ரோடை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிவகாசி அரசு மருத்துவமனைக்கு தினமும் 300க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக வருகின்றனர். 100 க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனை வளாகத்திற்குள் ரோடு சேதம் அடைந்துஉள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் தண்ணீர் வெளியேற வழியின்றி சேதம் அடைந்த ரோட்டில் தேங்கி விட்டது. இதனை கடந்து தான் நோயாளிகள், பார்வையாளர்கள், டாக்டர்கள், நர்சுகள் செல்ல வேண்டும்.

இதனால் மருத்துவமனைக்கு வருகின்ற அனைவரும் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் தேங்கியுள்ள தண்ணீரில் கொசு உற்பத்தியாகி நோயாளிகளை சிரமப்படுத்துகிறது.

எனவே மருத்துவமனை வளாகத்தில் சேதம் அடைந்த ரோட்டினை சீரமைத்து தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us