ADDED : ஜன 31, 2024 12:02 AM
விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார் நாடார் கல்லுாரியில் மாவட்ட போலீஸ் சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவின் சார்பில் மனித நேயம், நல்லிணக்கக்கூட்டம் ஏ.டி.எஸ்.பி., சோமசுந்தரம் தலைமையில் நடந்தது.
இதில் நில அபகரிப்பு சிறப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., விஜயக்குமார், மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் ரமேஷ், தாசில்தார் ரவிந்திரன், மாவட்ட அரசு வக்கீல் முத்துக்கிருஷ்ணன், கல்லுாரி செயலாளர் சர்ப்பராஜன், கல்லுாரி முதல்வர் சாரதி உள்பட பலர் பங்கேற்றனர். சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் நன்றி கூறினார்.