ADDED : ஜன 07, 2024 03:53 AM
விருதுநகர்: விருதுநகர் அருகே நடுவப்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சிதம் 53.
இவரின் இ.குமாரலிங்கபுரம் கடையில் போலீசார் சோதனை செய்தனர். அதில் கடை, கடைக்கு பின்புறம் முட்புதரில் மொத்தம் 14.400 கிலோ தடை செய்த புகையிலையை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்தனர். வச்சக்காரப்பட்டி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.