Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

ADDED : ஜூன் 20, 2025 11:54 PM


Google News
6 பவுன் திருட்டு

விருதுநகர்: ஒண்டிப்புலிநாயக்கனுாரை சேர்ந்த சரவணக்குமார் 43. இவரது தாய் முத்துலெட்சுமி, தந்தை முருகன் 70, விருதுநகர் பாரதி நகர் 7வது தெருவில் வசிக்கின்றனர். தந்தை பெட்டிக்கடை நடத்தியும், தவணைக்கு பணம் கொடுத்தும் வருகிறார். ஜூன் 18 இரவு 7:15 மணிக்கு முருகன் நெஞ்சுவலியால் விருதுநகர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் காலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டது தெரிந்தது. பீரோவில் இருந்த ஆறரை பவுன் திருடுபோனது. சரவணக்குமார் புகாரில் மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை

விருதுநகர்: கே.உசிலம்பட்டியை சேர்ந்த 41 வயது பெண். தோட்டத்தில் காளான் வளர்ப்பு தொழில் செய்கிறார். ஜூன் 19 மாலை 5:10 மணிக்கு தோட்டத்தில் நீர் பாய்ச்சி கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் 23, பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்து விட்டு தப்பி ஓடினார். பெண் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us