Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

ADDED : மே 30, 2025 03:13 AM


Google News

கத்திக்குத்து: 11 பேர் மீது வழக்கு


சாத்துார்: சாத்துார் கத்தாளம்பட்டியை சேர்ந்தவர் துர்க்கை பாண்டியன், 30. மின்சார வாரியத்தில் கேங் மேனாக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு அணைக்கரைப் பட்டி காளியம்மன் கோயில் பொங்கல் விழாவில் கலந்து கொள்ளச் சென்றார். அங்கு இவரது சித்தப்பா மகனான மைக் செட் உரிமையாளர் வினோத்குமார் மைக் செட் அமைத்திருந்தார். அவரிடம் ஜாதி பாடல் போடச் சொல்லி அதே ஊரைச் சேர்ந்த முனியாண்டி முனீஸ்வரன் தகராறு செய்தனர். துர்க்கை பாண்டி அவர்களை சமரசம் செய்தார். ஆத்திரமடைந்த முனியாண்டி, முனீஸ்வரன் ஆகியோர் கத்தியால் துர்க்கைபாண்டி இடுப்பில் குத்தினர்.

மேலும் அவர்களின் உறவினர்களான முத்துக்குமார், முனீஸ்வரி, காயத்திரி,தெய்வானை, இளையபாரதி, மாதேஷ் குமார், ராஜேஸ்வரி, சரஸ்வதி, மாரி செல்வி ஆகியோரும் துர்க்கை பாண்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். துர்க்கைபாண்டி மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதியவர் காயம்


சாத்துார்: சென்னையைச் சேர்ந்தவர் சீனிவாசன், 60. சாத்துார் ஒ.மேட்டுப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு விடுமுறைக்கு வந்துள்ளார்.நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு பேத்தி மதுமிதாவுடன் வாக்கிங் சென்ற போது ஏழாயிரம்பண்ணை ரோட்டில்அடையாளம் தெரியாத ஆட்டோ மோதியதில் படுகாயம் அடைந்து சாத்துார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வங்கி ஊழியர் மாயம்


வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கோட்டையூரை சேர்ந்தவர் அருண்குமார் 25,. இவர் ஸ்ரீவில்லிபுத்துார் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை.

கல்லுாரி மாணவர் மாயம்


சாத்துார்: சாத்துார் தென்றல் நகரை சேர்ந்தவர் மாரிச்சாமி மகன் சரவணகுமார், 23. பி.இ.மெக்கானிக் 2ம் ஆண்டு படித்து வருகிறார். மே 26ல் விருதுநகர் சென்றவர் மாயமானார்.

சிறுமி மாயம்


சாத்துார்: சாத்துார் அமீர் பாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுமி நேற்று முன்தினம் காலையில் போஸ்ட் ஆபிஸ் சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றவர் மாயமானார்.

பெண் மாயம்


சாத்துார்: சாத்துார் அருகே சல்வார் பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி 52. இவரது மகள் அனுசியா, 20. நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணிக்கு வெளியில் சென்றவர் மாயமானார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us