Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

ADDED : ஜன 28, 2024 07:09 AM


Google News
தீக்குளித்த பெண் பலி

விருதுநகர்: சின்னப்ரெட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் அடிக்கடி மது குடிப்பதால் ஜன. 20 இரவு 11:30 மணிக்கு மனைவி சந்தனதேவி 24, மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றவரை குமரேசன் தடுத்தும் தீவைத்து கொண்டதால் இருவரும் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சந்தனதேவி ஜன. 26 அதிகாலை 4:30 மணிக்கு பலியானார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

விவசாயி பலி

விருதுநகர்: எம்.அழகாபுரி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணன் 59. இவர் கலெக்டர் அலுவலக வேளாண்மைத்துறை முன்பு டிராக்டரில் கொண்டு வந்த மக்காசோளத்தை டிரெய்லரில் இருந்து இறக்கும் போது சிதறிய சோளத்தை சேகரிப்பதற்காக குனிந்த போது டிரெய்லர், டயருக்கு அடியில் சிக்கி இறந்தார். சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.

பட்டாசு பறிமுதல்

சிவகாசி: சிவகாசி பிச்சுப்பட்டியை சேர்ந்த குமரேசன் அதே பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இங்கு பதிவேல் தீபக் என்பவர் விதிமுறைகளை மீறி தகர செட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். எம்.புதுப்பட்டி போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து 105 பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us