ADDED : செப் 23, 2025 03:52 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: - ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்ஸவம் முடிந்த நிலையில், நேற்று மாலை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடந்தது.
செயல் அலுவலர் சக்கரை அம்மாள் தலைமையில் கண்காணிப்பாளர் ஆவுடையம்மாள், ஆய்வாளர் முத்து மணிகண்டன் முன்னிலையில் 8 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது.
இதில் ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் காணிக்கையாக வரப்பட்டதாக செயல் அலுவலர் தெரிவித்தார்.