Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/இந்தியாவிற்கே துரோகம் இழைத்தவர் நிதீஷ்குமார்: எம்.பி., மாணிக்கம் தாகூர் பேட்டி

இந்தியாவிற்கே துரோகம் இழைத்தவர் நிதீஷ்குமார்: எம்.பி., மாணிக்கம் தாகூர் பேட்டி

இந்தியாவிற்கே துரோகம் இழைத்தவர் நிதீஷ்குமார்: எம்.பி., மாணிக்கம் தாகூர் பேட்டி

இந்தியாவிற்கே துரோகம் இழைத்தவர் நிதீஷ்குமார்: எம்.பி., மாணிக்கம் தாகூர் பேட்டி

ADDED : ஜன 30, 2024 07:20 AM


Google News
விருதுநகர் : ''இண்டியா கூட்டணிக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே துாரோகம் இழைத்தவர் பீஹார் முதல்வர் நிதீஷ்குமார்,, '' என எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: இந்தியாவின் பல்டி ராஜாவாக பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் மாறியிருக்கிறார். தொடர்ந்து எட்டு முறை பல மாறுபட்ட கட்சிகளோடு கூட்டணி வைத்து முதல்வர் பதவியை பிடிப்பதில் மட்டுமே கூறியாக இருந்தவர்.

மேற்கு வங்கத்தில் காங்., தனித்து போட்டியிட்டு வென்ற இடங்களை மட்டுமே மம்தா தருவதாக தெரிவித்துள்ளார். இண்டியா கூட்டணியில் ஒரு கட்சி மட்டுமே வெளியேறியுள்ளது, மற்ற 25 கட்சிகளும் ஒன்றாக இருக்கிறது.

பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க., வுடன் இருந்த கூட்டணியை உடைத்தவர். விருதுநகர் தொகுதி யாருக்கு ஒதுக்குவது என்பது தி.மு.க., தலைமை முடிவு செய்யும். நடிகர் விஜய் ஜனநாயக முறைப்படி கட்சி துவங்கி லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது நல்லது, என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us