Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தேசிய கூடைப்பந்து போட்டி ராஜபாளையத்தில் துவங்கியது

தேசிய கூடைப்பந்து போட்டி ராஜபாளையத்தில் துவங்கியது

தேசிய கூடைப்பந்து போட்டி ராஜபாளையத்தில் துவங்கியது

தேசிய கூடைப்பந்து போட்டி ராஜபாளையத்தில் துவங்கியது

ADDED : மே 11, 2025 05:42 AM


Google News
Latest Tamil News
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. போட்டிகள் மே 15 வரை நடக்கிறது.

ராஜபாளையம் நகர கூடைப்பந்து கழகம் சார்பில் 30 வது ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் பி.ஏ.சி.எம் பள்ளி மைதானத்தில் மின்னொளி போட்டியாக நேற்று மாலை தொடங்கியது.

இதில் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, கேரள மின்வாரியம், போலீஸ், பேங்க் ஆப் பரோடா, ரெஸ்ட் ஆப் தமிழ்நாடு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி போன்றவைகள் பங்கேற்கின்றன. பெண்கள் பிரிவில் மேற்கு ரயில்வே மும்பை, வருமான வரித்துறை சென்னை, கேரள மின்வாரியம், ரைசிங் ஸ்டார் சென்னை அணிகள் பயிற்சியாளர் மேலாளர் என 170 பேர் பங்கேற்கின்றனர்.

போட்டிகள் தினமும் மாலை 5:00 மணிக்கு தொடங்கி பி.ஏ.சி.எம் பள்ளி மைதானத்தில் மின்னொளியில் நடைபெறுகிறது. லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகளாக நடைபெறும் இதன் இறுதிப்போட்டி மே 15ல் நடக்கிறது. ஏற்பாடுகளை ராஜபாளையம் நகர கூடைப்பந்து கழக தலைவர் ராம்குமார், செயலாளர் பீமானந்த், பொருளாளர் ராம் சிங் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us