/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சேறும் சகதியுமான வீதி, ஓடையில் பாலம் இல்லாததால் சிரமம் தவிப்பில் காரியாபட்டி சிலோன் காலனி மக்கள்சேறும் சகதியுமான வீதி, ஓடையில் பாலம் இல்லாததால் சிரமம் தவிப்பில் காரியாபட்டி சிலோன் காலனி மக்கள்
சேறும் சகதியுமான வீதி, ஓடையில் பாலம் இல்லாததால் சிரமம் தவிப்பில் காரியாபட்டி சிலோன் காலனி மக்கள்
சேறும் சகதியுமான வீதி, ஓடையில் பாலம் இல்லாததால் சிரமம் தவிப்பில் காரியாபட்டி சிலோன் காலனி மக்கள்
சேறும் சகதியுமான வீதி, ஓடையில் பாலம் இல்லாததால் சிரமம் தவிப்பில் காரியாபட்டி சிலோன் காலனி மக்கள்

தண்ணீர் சப்ளை தேவை
சின்னையா, தனியார் ஊழியர்: பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தரைதள தொட்டி சேதமடைந்துள்ளதால் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது புதிய தொட்டி கட்ட வேண்டும். மின் இணைப்பு பெட்டி ஓடையில் அமைந்துள்ளதால் மழை நேரங்களில் தண்ணீரில் மூழ்கி மின்சாரம் பாயும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது. குழாய்கள் சேதம் அடைந்துள்ளன. ஒரே ஒரு குழாய் மட்டும் இருப்பதால் இப்பகுதி மக்களுக்கு போதுமானதாக இல்லை. கூடுதல் தரைதள தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேவர் பிளாக்பதிக்க வேண்டும்
ராஜலட்சுமி, குடும்பத் தலைவி: மழை நேரங்களில் ஓடையில் மழை நீர் இடுப்பளவு தேங்குகிறது. கடந்து செல்ல முடியவில்லை. பாலம் அமைக்க வேண்டும். மழை நேரங்களில் வீதிகளில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளன. புதர் மண்டி கிடப்பதால் நடமாட முடியவில்லை விஷ பூச்சிகளின் நடமாட்டம் இருப்பதால் அச்சத்துடன் நடக்க வேண்டி இருக்கிறது. பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும். வாறுகால் வசதி கிடையாது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வீதிகளில் தேங்குகிறது. தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெருவிளக்குகள் இல்லை
பாண்டியம்மாள், குடும்பத் தலைவி: குடிநீருக்கு ஒரே ஒரு குழாய் மட்டுமே உள்ளது. இப்பகுதியில் உள்ள அனைவரும் ஒரே இடத்தில் பிடிப்பதால் சிரமம் ஏற்படுகிறது.