ADDED : செப் 16, 2025 03:56 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட விபத்துக்களில் பெற்றோரை இழந்த 23 குழந்தைகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.4.46 லட்சத்திற்கான ஆணைகளை அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.
இதில் கலெக்டர் சுகபுத்ரா, எம்.எல்.ஏ.,கள் சீனிவாசன், அசோகன், மேயர் சங்கீதா, தொழிலக பாதுகாப்பு, சுகாதாரம் இணை இயக்குனர்கள் ரவிச்சந்திரன், ராஜ்குமார், நகராட்சி தலைவர் மாதவன் உள்பட பலர் பங்கேற்றனர்.


