Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பராமரிப்பு பணிவழித்தடம் மூடல்

பராமரிப்பு பணிவழித்தடம் மூடல்

பராமரிப்பு பணிவழித்தடம் மூடல்

பராமரிப்பு பணிவழித்தடம் மூடல்

ADDED : ஜன 11, 2024 05:16 AM


Google News
விருதுநகர் : விருதுநகர் - சிவகாசி ரயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால், இன்று(ஜன. 11) மட்டும் சாத்துார் ரோடு வழித்தடம் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

விருதுநகர் - சாத்துார் நெடுஞ்சாலையை இணைக்கும் ரோட்டில் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள லெவல் கிராஸிங் கேட்டின் ரயில்வே இருப்பு பாதையில் இன்று காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடப்பதால், அந்த ஒரு வழிதடத்தை மட்டும் மூடுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனவே மக்கள் அனைவரும் வழியை விடுத்து, மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகம் கேட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us