ஆக்கிரமிப்புகளைஅகற்ற வேண்டும்
காசி, விவசாயி: பெரியகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் விழுந்து செங்குளம் கண்மாய்க்கு வரும் நீர் வரத்து பாதையில் சிவஞானபுரம் தெருவிற்கு பின் பகுதியில் கழிவுகள் கொட்டப்பட்டும், ஆக்கிரமிப்புகள் அதிகரித்தும் காணப்படுகிறது. மேலும் முதலியார் பட்டி தெருவில் இருந்து கண்மாய் வரை உள்ள நீர் வரத்து பாதையை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும். இதன் மூலம் இந்த கண்மாய் மீண்டும் பாசன வசதி பெறும்.
விஷ பூச்சிகள் நடமாட்டம்
குருசாமி, குடியிருப்பாளர்: முதலியார்பட்டி தெருவில் இருந்து சிவகாசி ரோடு, பட்டுப்பூச்சி அலுவலகம் வழியாக கண்மாய் வரை உள்ள நீர்வரத்து பாதையில் செடி கொடிகள் அதிகம் வளர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் விஷ பூச்சிகள் நடமாட்டம் அடிக்கடி ஏற்படுகிறது. குறிப்பாக மழைநேரங்களில் மக்கள்அதிக சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது. எனவே இந்த கண்மாயின் நீர் வரத்து பாதையை முழு அளவில் சுத்தம் செய்தும்தூர்வாரி சீரமைக்க வேண்டும்.