ADDED : செப் 10, 2025 08:04 AM
காரியாபட்டி : காரியாபட்டி தரகனேந்தல் கண்மாயில் 45 வயது மதிக்கத்தக்க பெண் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
அப்பகுதியில் ஆடு மாடு மேய்க்கச் சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தலையில் காயம் இருப்பதால் கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என ஆவியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.