Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கர்ப்பிணிகளிடம் லஞ்சம் மருத்துவமனை பணியாளர் டிஸ்மிஸ்

கர்ப்பிணிகளிடம் லஞ்சம் மருத்துவமனை பணியாளர் டிஸ்மிஸ்

கர்ப்பிணிகளிடம் லஞ்சம் மருத்துவமனை பணியாளர் டிஸ்மிஸ்

கர்ப்பிணிகளிடம் லஞ்சம் மருத்துவமனை பணியாளர் டிஸ்மிஸ்

ADDED : பிப் 06, 2024 12:09 AM


Google News
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது கர்ப்பிணிகளிடம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரில் மருத்துவமனை தற்காலிக பணியாளர் விஜயலட்சுமியை டிஸ்மிஸ் செய்து விருதுநகர் மருத்துவ துறை நலப்பணிகள் இணை இயக்குனர் மாரியப்பன் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் கர்ப்பிணிகளிடம் பிரசவத்தின் போது லஞ்சம் கேட்பதாக மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் சென்றது.இதனையடுத்து துறை ரீதியாக விசாரணை நடந்தது. இதில் தற்காலிக பணியாளர் விஜயலட்சுமி லஞ்சம் பெறுவது நிருபணமாகியது.

இதனையடுத்து அவரை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்து விருதுநகர் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் மாரியப்பன் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் மற்றொரு பெண் ஊழியர் ஒருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us