/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மழையை முன்னிட்டு நெடுஞ்சாலை பராமரிப்பு மழையை முன்னிட்டு நெடுஞ்சாலை பராமரிப்பு
மழையை முன்னிட்டு நெடுஞ்சாலை பராமரிப்பு
மழையை முன்னிட்டு நெடுஞ்சாலை பராமரிப்பு
மழையை முன்னிட்டு நெடுஞ்சாலை பராமரிப்பு
ADDED : மே 28, 2025 07:05 AM

திருச்சுழி : திருச்சுழி பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்படும் பாலங்கள், ரோடுகள் ஆகியவற்றின் சாலையோர முட்புதர்கள், பட்டுப்போன மரங்கள் அகற்றுதல், மழைநீர் ஓடைகளை சீரமைக்கும் பணி தென்மேற்கு பருவ மழை வருவதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணிகள் நடந்து வருகிறது.
திருச்சுழி - கமுதி - சாயல்குடி ரோட்டில் அகற்றினர். மழைநீர் தேங்காத வகையில் பணி செய்யப்பட்டு வருகிறது.
பலத்த காற்றிற்கு மரங்கள் விழுந்தால் உடனடியாக அப்புறப்படுத்த இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறினர்.