ADDED : ஜூன் 13, 2025 02:40 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் குழந்தைகள் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது.
உலக குழந்தைகள் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அருப்புக்கோட்டை சட்ட பணிகள் குழு, விருதுநகர் மாவட்ட தொழிலாளர் நல துறை இணைந்து நடத்திய கையெழுத்து இயக்கத்திற்கு சார்பு நீதிபதி சதீஷ் தலைமை வகித்தார். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆனந்தவள்ளி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவரஞ்சனி, குற்றவியல் நீதிபதி ஜெயப்பிரதா கலந்து கொண்டனர்.
வக்கீல் சங்க செயலாளர் லாவண்யா, பொருளாளர் பாலாஜி, வக்கீல்கள், தொழிலாளர் மேம்பாட்டு துறை ஆய்வாளர் உமா மகேஸ்வரன், கோர்ட் ஊழியர்கள் ஆகியோர் விழிப்புணர்வு கையெழுத்து இட்டனர்.-