/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பணிமனை மேலாளரை தாக்கிய அரசு பஸ் ஓட்டுனர்பணிமனை மேலாளரை தாக்கிய அரசு பஸ் ஓட்டுனர்
பணிமனை மேலாளரை தாக்கிய அரசு பஸ் ஓட்டுனர்
பணிமனை மேலாளரை தாக்கிய அரசு பஸ் ஓட்டுனர்
பணிமனை மேலாளரை தாக்கிய அரசு பஸ் ஓட்டுனர்
ADDED : ஜன 28, 2024 01:43 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் பாலமுருகன், 47. இவர், ஜன. 26 காலை, 11:20க்கு பணிமனையில் இருந்தார். அங்கு வந்த மீசலுார் அண்ணா நகரைச் சேர்ந்த ஓட்டுனர் பாலசுப்பிரமணியன், விடுமுறை கடிதத்தில் கையெழுத்திடுமாறு அவரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு, 'நீங்கள் தொடர்ந்து ஏழு நாட்களாக அனுமதியின்றி விடுப்பு எடுத்ததால், கையெழுத்து போட முடியாது; உதவி பொறியாளரிடம் கேட்டுக் கொள்கிறேன்' என, பதில் அளித்துள்ளார்.
ஆனால், விடுப்பு வழங்க வலியுறுத்தி, வாக்குவாதம் செய்து, பாலமுருகனை, பாலசுப்பிரமணியன் தாக்கி உள்ளார். விருதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.