ADDED : ஜன 31, 2024 12:00 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை போக்குவரத்து அலுவலகத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு விபத்தில் சிக்கியவர்களுக்கு எப்படி முதல் உதவி சிகிச்சை அளிப்பது குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வட்டார போக்குவரத்து கண்ணன் தலைமை வகித்தார். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விபத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்க வேண்டும், எவ்வாறு முதல் உதவி சிகிச்சை செய்வது குறித்து விளக்கினர்.
இதில், அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.- -