/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மண் ரோடால் அல்லல்; தெருவில் தேங்கும் கழிவுநீர் ஒத்தையால் இந்திரா காலனி மக்கள் அவதி மண் ரோடால் அல்லல்; தெருவில் தேங்கும் கழிவுநீர் ஒத்தையால் இந்திரா காலனி மக்கள் அவதி
மண் ரோடால் அல்லல்; தெருவில் தேங்கும் கழிவுநீர் ஒத்தையால் இந்திரா காலனி மக்கள் அவதி
மண் ரோடால் அல்லல்; தெருவில் தேங்கும் கழிவுநீர் ஒத்தையால் இந்திரா காலனி மக்கள் அவதி
மண் ரோடால் அல்லல்; தெருவில் தேங்கும் கழிவுநீர் ஒத்தையால் இந்திரா காலனி மக்கள் அவதி

சுகாதாரக் கேடு
ராஜபாண்டியன், கூலித்தொழிலாளி: வாறுகால் துார்வாரப்படுவதில்லை. மக்களே செய்கின்றனர். கூடுதலான துப்புரவு பணியாளர்களை நியமித்து இப்பணிகளை செய்தால் மட்டுமே சுகாதார கேட்டிற்கு தீர்வு ஏற்படும்.
புதர்மண்டிய வளாகம்
கருப்பசாமி, கூலித்தொழிலாளி: ஊராட்சியில் மூன்று இடங்களில் பொது சுகாதார வளாகங்களை கட்டித் தந்துள்ளனர். ஆனால் இதை பராமரிப்பதற்கு ஆட்கள் இல்லாத நிலையில் இவை தற்போது புதர் மண்டி காணப்படுகிறது.
ரோடு வசதி தேவை
மகேந்திரன், கூலித்தொழிலாளி: காலனிக்கு செல்லும் பிரதான ரோடு மண் ரோடாக உள்ளது. மழைக்காலத்தில் கழிவு நீரும், மழை நீரும் சேர்ந்து பாதையில் நிற்கிறது. வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர்.
கொசுக்கடியால் அவதி
காளிமுத்து, கூலித்தொழிலாளி: காலனியில் காலியாக உள்ள இடங்களில் குப்பை கொட்டப்படுகின்றன. கழிவுநீர் முறையாக செல்லாததால் வாறுகாலில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதில் அதிக அளவு கொசு உற்பத்தி ஆகிறது.