Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பாலப் பணிக்காக இடிக்கப்பட்ட குடிநீர் தொட்டி மீண்டும் கட்டாததால் சிரமம்

பாலப் பணிக்காக இடிக்கப்பட்ட குடிநீர் தொட்டி மீண்டும் கட்டாததால் சிரமம்

பாலப் பணிக்காக இடிக்கப்பட்ட குடிநீர் தொட்டி மீண்டும் கட்டாததால் சிரமம்

பாலப் பணிக்காக இடிக்கப்பட்ட குடிநீர் தொட்டி மீண்டும் கட்டாததால் சிரமம்

ADDED : செப் 20, 2025 11:26 PM


Google News
சிவகாசி: சிவகாசி ஆனையூர் ஊராட்சி அண்ணாமலையார் காலனியில் பாலம் சாலை விரிவாக்க பணிக்காக இடிக்கப்பட்ட மேல்நிலைக் குடிநீர் தொட்டி மீண்டும் கட்டப்படாததால் மக்கள் குடிநீருக்கு சிரமப்படு கின்றனர்.

சிவகாசி சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடந்து வருகிறது. பாலம் பணிகள் நடக்கும் இடத்தின் அருகே அண்ணாமலையார் காலனியில் மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய ரோட்டின் அருகில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை குடிநீர் தொட்டி இயங்கி வந்தது.

சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் பணி, ரோடு விரிவாக்கத்திற்காகவும் 7 மாதங்களுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டது. அந்த நேரத்தில் வேறு இடத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரையிலும் தொட்டி கட்டும் பணிகள் துவங்கவில்லை.

இதனால் அண்ணாமலையார் காலனி பகுதி மக்கள் குடிநீருக்கு சிரமப்படுகின்றனர். எனவே உடனடியாக மேல்நிலை குடிநீர் தொட்டியை கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us