ADDED : ஜன 24, 2024 05:00 AM
சாத்துார : காங்., எம்.பி., ராகுல் அசாம் மாநிலத்தில் நடை பயணம் சென்றபோது அவரது வாகனம் தாக்கப்பட்டது. இச்சம்பவத்தை கண்டித்தும் மத்திய , அசாம் மாநிலபி.ஜே.பி.யை கண்டித்து சாத்துார் நகரவட்டார காங்., கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விருதுநகர் மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ் தலைமை வகித்தார் நகரத் தலைவர் அய்யப்பன் வட்டாரத் தலைவர்கள் சுப்பையா, கும்கிகார்த்திக் முன்னிலை வகித்தனர்.
வட்டாரதுணைத் தலைவர்கள் ஆறுமுகம், முத்துவேல், மகளிர் காங்., தலைவி எலிசா ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.


