Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/திருச்சுழியில் ரேஷன் அரிசி பறிமுதல்

திருச்சுழியில் ரேஷன் அரிசி பறிமுதல்

திருச்சுழியில் ரேஷன் அரிசி பறிமுதல்

திருச்சுழியில் ரேஷன் அரிசி பறிமுதல்

ADDED : பிப் 10, 2024 04:14 AM


Google News
Latest Tamil News
திருச்சுழி: திருச்சுழி பஜார் பகுதியில் எஸ்.ஐ., வீரண்ணன் மற்றும் போலீசார் வாகன சோதனை செய்த போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 3 ஆயிரத்து 650 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரிந்தது.

மேலும் ரேஷன் அரிசியை கடத்தி வந்த ராமநாதபுரம் வெள்ளாங்குளத்தைச் சேர்ந்த டிரைவர் வேல்முருகன், 24, பொதுக்குளத்தை சேர்ந்த முத்துக் குமார், 26, கடலாடியை சேர்ந்த முத்துக்குமார், 22, ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில், அருப்புக்கோட்டை, கட்டங்குடி பகுதிகளில் உள்ள வீடுகளில் ரேஷன் அரிசியை பெற்றது தெரிய வந்தது. கடத்தி வந்த ரேஷன் அரிசி, மூன்று பேர்களையும் விருதுநகர் மாவட்ட உணவு கடத்தல் பிரிவு அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us