ADDED : செப் 12, 2025 04:12 AM
சாத்துார்: சாத்துார் எஸ்.ஆர்.என்.எம்.கல்லுாரியில் புதிய மைய நுாலகம் திறப்பு விழா நடந்தது.
ஆந்திரா ராஜமுந்திரி திருமலா, கல்வி நிறுவனங்களின் தலைவர் நுன்னா திருமலா ராவ் புதிய மைய நுாலகத்தை திறந்து வைத்தனர். முதல்வர் கிருஷ்ணவேணி வரவேற்றார் தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார்.செயலாளர் கண்ணன் வரவேற்றார். பேராசிரியர் அஜந்தா நிகழ்ச்சியை தொகுத்தார். சரோஜினி நுன்னா பேசினார்.
பேராசிரியர் அருணேஷ் நன்றி கூறினார். பேராசிரியர்கள் மாணவர்கள் அலுவலர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.