ADDED : ஜன 11, 2024 04:36 AM
விருதுநகர், விருதுநகரில் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் தமிழ் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுடன் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடந்தது.
கோ ஆப்டெக்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குனர் ஆனந்தக்குமார், கலெக்டர் ஜெயசீலன் மாணவர்களுடன் கலந்துரையாடினர். மாணவர்களின் லட்சியம், துறை ஆர்வம் குறித்து கேட்டறிந்தார். தமிழ் ஆர்வத்தை வளர்த்தல், சிறுகதை படைத்தல், இலங்கியங்கள், தமிழ் அறிஞர்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
கலெக்டர் பேசுகையில், அனைவருக்கும் லட்சியம் உண்டு. அதை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது, என்றார்.