ADDED : பிப் 06, 2024 12:15 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் இருந்த பழைய சார்பதிவாளர் அலுவலக கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
ரூ1.86 கோடியில் கட்டப்பட உள்ள புதிய கட்டடத்திற்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.இதில், சார்பதிவாளர் அறை, பதிவு அறை, அலுவலகப் பகுதி, பல்நோக்கு அறை, கணினி அறை, கழிப்பறைகள் உட்பட வசதிகள் உள்ளது.
நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன், நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி உட்பட அரசு அலுவலர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.