ADDED : ஜன 29, 2024 04:57 AM
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியின் மாணவர் சேவை மையம் சார்பில் பாலின சமத்துவம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லுாரிச் செயலாளர் சர்ப்பராஜன் தலைமையில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் சாரதி, கல்லுாரி சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், திருநங்கை பிரக்யா பங்கேற்று பேசினர்.
ஏற்பாடுகளை விசாகா கமிட்டி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் புஷ்பவேணி செய்தார்.