ADDED : செப் 04, 2025 03:58 AM

விருதுநகர்: விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலின் ஆவணி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆவணி பிரம்மோற்ஸவ திருவிழா ஆக. 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி இரவு அன்ன வாகனம், கைலாச வாகனம், நந்தி, குதிரை, சிங்கம், யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்வான மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது.
நேற்று காலை தேரோட்டம் நடந்தது. கோயில் வளாகத்தில் துவங்கி மேலத்தெரு முக்கிய வீதிகள் வழியாக தேர் சென்று அதன் நிலையை அடைந்தது. அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டது. அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், நகராட்சி தலைவர் மாதவன் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சொக்கநாத சுவாமி கோயில் பிரமோற்ஸவ கட்டளை செய்தது.