Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/உதவி பெறும் பள்ளிகளுக்கும் அரசு திட்டங்கள் வேண்டும்: தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை

உதவி பெறும் பள்ளிகளுக்கும் அரசு திட்டங்கள் வேண்டும்: தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை

உதவி பெறும் பள்ளிகளுக்கும் அரசு திட்டங்கள் வேண்டும்: தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை

உதவி பெறும் பள்ளிகளுக்கும் அரசு திட்டங்கள் வேண்டும்: தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை

ADDED : ஜன 12, 2024 12:35 AM


Google News
அருப்புக்கோட்டை : மாணவர்களுக்கான உணவுத் திட்டம் உள்ளிட்ட அரசு திட்டங்கள் அனைத்தும் அரசு உதவி பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும், என தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாட்டு செயலாளர் கந்தசாமி கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது: சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கிராமப்புற சிறுபான்மை நிதி உதவி பள்ளிகளில் 1 -- 5 வகுப்பு வரை காலை சிற்றுண்டி திட்டம், 6 -- 12 வகுப்புகளுக்கு புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம், பணி நியமன வயது தளர்வு குறித்த அறிவிப்புகள் வந்துள்ளன.

இதுபோன்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்டங்களை உதவி பெறும் பள்ளிகளுக்கும் நீட்டித்து வழங்க வேண்டும். சிறுபான்மை, சிறுபான்மையற்ற என பாகுபாடு காட்டக்கூடாது. சிறுபான்மையினருக்கு தருவது போல், அனைத்து திட்டங்களையும் மற்ற உதவி பெறும் பள்ளிகளுக்கும் கொண்டு வர வேண்டும். இதில் பாரபட்சம் இருக்கக் கூடாது. அனைத்து பள்ளிகளிலும் ஏழை மாணவர்கள் பயின்று வருகின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us