ADDED : ஜன 07, 2024 04:00 AM

சாத்துார்: ஆலங்குளம் குண்டாயிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் இவர் மகன் இசக்கி வேல், 27. நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு அங்குள்ள காயல்குடி ஆற்றில் குளிக்க சென்றார்.
திடீரென நீர் வரத்து அதிகரிக்கவே வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையவீரர்கள் அவரை தேடினர். நேற்று காலை 9:00 மணிக்கு வெம்பக்கோட்டை அணை அருகில் அவரது உடலை மீட்டனர்.ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.