ADDED : ஜூலை 14, 2024 04:16 AM
நரிக்குடி : நரிக்குடி இருஞ்சிறை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆயுஷ் அரசு கிராமிய சித்த மருத்துவம் சார்பில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி முகாம் நடந்தது.
மாணவர்களுக்கு யோகா ஆசிரியர் மார்த்தாண்டன் பயிற்சியளித்தார். இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் பெற்றனர். சித்த மருத்துவர் சுதந்திரம், தலைமையாசிரியர் ஜெபகனி, ஆசிரியர்கள் சுப்பாராஜ், சிந்தா, வழிவிட்டான், கணேசன், ஞானம்மாள், ஹேமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.