ADDED : ஜூலை 22, 2024 04:19 AM
சிவகாசி: ஆலமரத்துப்பட்டி ரோடு முத்துமாரி நகரை சேர்ந்தவர் முனியசாமி 55.
தீப்பெட்டி ஆலையில் வேலை பார்க்கும் இவர் தனது சைக்கிளில் செங்கமல நாச்சியார்புரம் ரோட்டில் சென்ற போது விளாம்பட்டி ரோடு முனீஸ் நகரை சேர்ந்த சுரேஷ் 39, ஓட்டி வந்த கிரேன் வாகனம் மோதியதில் காயம் அடைந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர்.-----