Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு வருமா

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு வருமா

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு வருமா

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு வருமா

ADDED : ஜூலை 09, 2024 04:25 AM


Google News
சிவகாசி: சிவகாசியில் பயன்பாடு இல்லாமல் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், மின் விசைப்பம்பு குடிநீர் தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிவகாசி மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மக்கள் சுகாதாரமான குடிநீரை அருந்த வேண்டும் என்பதற்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன.

பல்வேறு இடங்களில் மக்களின் நிதி உதவியோடு ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. மக்களுக்கு குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதே இதன் நோக்கம். ஆனால் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்ட நாளிலிருந்தே எந்த இடத்திலும் செயல்படவில்லை. இதனால் மக்கள் குடிநீரை அதிக விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.

சிவகாசியில் கட்டளை பட்டி ரோடு, பிச்சாண்டி தெரு, அண்ணா காலனி, அம்மன் கோவில்பட்டி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்று வரையிலும் பயன்பாட்டில் இல்லை.

அதே சமயத்தில் மக்களின் பயன்பாட்டிற்காக புழக்கத்திற்கு என மின் விசைப் பம்புடன் கூடிய தொட்டிகள் அமைக்கப்பட்டன. இவைகள் சில மாதங்கள் மட்டுமே செயல்பட்ட நிலையில் பெரும்பான்மையானவைகாட்சி பொருளாகி விட்டது.

இதனால் அனைத்து தேவைகளுக்குமே மக்கள்தண்ணீரை விலைக்கு வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுஉள்ளனர்.

சிவகாசி பகுதியில் பைபாஸ் ரோடு, அம்மன் கோவில்பட்டி தெரு, விஸ்வநத்தம் ரோடு, பழைய விருதுநகர் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள மின் விசை பம்பு குடிநீர் தொட்டிகள் பயன்பாட்டில் இல்லை.

மின் விசை பம்புகளை ஆறு மாதத்திற்கு ஒருமுறை உள்ளாட்சி நிர்வாகம்கண்காணித்து அதனை செயல்படுத்த வேண்டும். ஆனால் அந்த நடைமுறை காற்றில் பறந்து விட்டது. இதனால் சில இடங்களில் தொட்டிகளும் காணாமல் போய்விட்டது.

எனவே செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதோடு மின்விசை பம்புகள் இயங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us