ADDED : ஜூலை 07, 2024 11:52 PM

விருதுநகர்: விருதுநகர் வி.சி.க., சார்பில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நகர செயலாளர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாநிலத் துணைச் செயலாளர் ஜோசப், மாவட்டச் செயலாளர் சந்திரன், மத்திய மாவட்ட செயலாளர் செழிவேந்திரன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.