/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சிவகாசியில் மெக்கானிக் கொலை வழக்கில் இருவர் கைது சிவகாசியில் மெக்கானிக் கொலை வழக்கில் இருவர் கைது
சிவகாசியில் மெக்கானிக் கொலை வழக்கில் இருவர் கைது
சிவகாசியில் மெக்கானிக் கொலை வழக்கில் இருவர் கைது
சிவகாசியில் மெக்கானிக் கொலை வழக்கில் இருவர் கைது
ADDED : ஜூன் 05, 2024 12:14 AM

சிவகாசி : சிவகாசி அண்ணா காலனியில் முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்த மெக்கானிக் முத்துப்பாண்டியை கொலை செய்த நேரு காலனியைச் சேர்ந்த மணிகண்டன், தனபாலை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி 37. மெக்கானிக்.
இவர் நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு அண்ணா காலனியில் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார். இது தொடர்பாக டவுன் போலீசார் முத்துப்பாண்டியை கொலை செய்ததாக நேரு காலனியைச் சேர்ந்த மணிகண்டன் 35, தனபால் 39, ஆகியோரை இன்ஸ்பெக்டர் புகழேந்தி, போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், முத்துப்பாண்டி அடிக்கடி மணிகண்டனிடம் மது கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
மது வாங்கி தரவில்லையென்றால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 8:00 மணி அளவில் மணிகண்டன் தனது நண்பர் தனபாலுடன் வந்து முத்துப்பாண்டியை மது அருந்த அழைத்துள்ளார். அண்ணா காலனியில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் மணிகண்டன், முத்துப்பாண்டியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
மணிகண்டன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த தனபாலையும் கைது செய்துள்ளோம், என்றனர்.