ADDED : ஜூன் 03, 2024 02:36 AM
விருதுநகர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி ஜெகதீஷ் லோகர் 51. இவர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்.
இவர் மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி வாழ்வில் எல்லாவற்றிலும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்துவதற்காக டூவீலரில் இந்தியா முழுவதும் பயணம் செய்து வருகிறார்.
இந்நிலையில் ஜோத்பூரில் இருந்து டூவீலரில் மே 22ல் பயணத்தை துவங்கி மத்திய பிரதேசம், மகராஷ்டிரா, கர்நாடகா வழியாக கன்னியாகுமரிக்கு மே 31ல் வந்தார். மேலும் ராஜஸ்தானிற்கு ஆந்திரா வழியாக செல்கிறார்.