Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் ஓய்வு வனச்சரகர் மதுரை சிறையில் அடைப்பு

ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் ஓய்வு வனச்சரகர் மதுரை சிறையில் அடைப்பு

ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் ஓய்வு வனச்சரகர் மதுரை சிறையில் அடைப்பு

ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் ஓய்வு வனச்சரகர் மதுரை சிறையில் அடைப்பு

ADDED : ஜூன் 08, 2024 05:42 AM


Google News
ஸ்ரீவில்லிபுத்தூர் : 2010ல் தனது நிலத்தில் இருந்த தேக்கு மரங்களை வெட்டி எடுத்துச் செல்ல நில உரிமையாளரிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் தண்டனை பெற்ற ஓய்வு பெற்ற வனச்சரகர் சுப்பிரமணியன் 72,க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்த அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் படிக்காசு வைத்தான்பட்டியில் புன்செய் நிலத்தில் வளர்த்து வந்த 9 தேக்கு மரங்களை சொந்த உபயோத்திற்கு வெட்ட அனுமதி வேண்டி 2010ல் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகர் சுப்ரமணியனிடம் மனு கொடுத்தார். இதற்கு அனுமதி கொடுக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் வனச்சரகர் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். இவ் வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் 2017ல் அவருக்கு 3 ஆண்டு சிறையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுப்பிரமணியன் மேல்முறையீடு செய்தார். இதில் 3 ஆண்டு தண்டனை ஒரு ஆண்டு தண்டனையாக குறைக்கப்பட்டு, அபராதம் ரூ. 40 ஆயிரம் விதிக்கப்பட்டதை உறுதி செய்து மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி இளங்கோவன் 2023 ஜூலை 3ல் உத்தரவிட்டார்.

சுப்பிரமணியன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அளித்த தீர்ப்பை உறுதி செய்து, சுப்பிரமணியனின் மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்த சுப்பிரமணியனை, சிறையில் அடைக்க நீதிபதி பிரீத்தா உத்தரவிட்டார். மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுப்பிரமணியனை நேற்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us