ADDED : ஜூன் 09, 2024 03:00 AM

விருதுநகர், : விருதுநகர் மருதுார் அய்யனார் சுவாமி கோயிலில் வைகாசி மாத துணைக்களரி திருவிழா நடந்தது.
இதில் மதியம் 3:00 மணிக்கு மேல் மங்கள வாத்தியத்துடன் பூஜைப் பெட்டி, பொங்கல் பானைகளுடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். அதிகாலை 12:00 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு பூஜைகள் நடந்தது. அதிகாலை 4:30 மணிக்கு கிடா வெட்டிய பின் சுவாமிக்கு பூஜைகள் செய்து இருப்பிடம் வந்தடைதல் நிகழ்வு நடந்தது.