ஸ்ரீவில்லிபுத்தூர்: மதுரை மாவட்டம் ஹார்விப்பட்டியை சேர்ந்தவர் நல்ல முத்துப்பாண்டி, 18, இவர் மல்லிபுதூர் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தங்கி பாப்பைய நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
ஜூன் 11ல் பள்ளிக்குச் சென்ற நல்ல முத்துப்பாண்டி மாலை பள்ளி முடிந்து மீண்டும் குழந்தைகள் இல்லத்திற்கு திரும்பவில்லை. இது குறித்து மல்லி போலீசார் மாணவரை தேடி வருகின்றனர்.