Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் பற்றாக்குறை

அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் பற்றாக்குறை

அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் பற்றாக்குறை

அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் பற்றாக்குறை

ADDED : ஜூலை 05, 2024 04:14 AM


Google News
சிவகாசி: மாவட்டத்தில் நகர், கிராம பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையால் நோயாளிகள், கர்ப்பிணிகள் நீண்டநேரம் காத்திருப்தோடு, வெளிநகரங்களுக்கு சிகிச்சைக்காக செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்ட பணி இடங்களில் முழுமையாக டாக்டர்கள், நர்சுகள்பணிபுரியவில்லை. பெரும்பாலான இடங்களில் பணியிடங்கள் காலியாகவே உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் 80 சதவீதமும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 50 சதவீதமும் மட்டுமே டாக்டர், நர்சுகள் பணியில் உள்ளனர். அரசு மருத்துவமனைக்கு தினமும் குறைந்தது 400க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 200க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

உள்நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வாறு வருபவர்களுக்கு டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையால் உடனடியாக சிகிச்சை அளிக்க வழி இல்லை. ஏனெனில் நீண்ட நேரம் காத்திருப்பதால் சிறிய காய்ச்சல், தலைவலி என்றாலும் ஒரு நாள் முழுவதும் வீணாகிறது.

பெரும்பாலும் கூலி தொழிலாளர்கள் தான் அதிக அளவில் அரசு மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். இது போல் ஒரு நாள் முழுவதும் வீணாவதால் அவர்களின் ஒரு நாள் வருமானமும் பாதிக்கப்படுகின்றது.

மேலும் பெரும்பான்மையான அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க மகப்பேறு டாக்டர்களும் பற்றாக்குறையாக உள்ளனர். இதனால் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகளை மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர். இந்த கால விரயத்தாலும்உரிய நேரத்தில் வாகனங்கள் கிடைக்காததாலும்அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையை தீர்த்து, கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க மகப்பேறு டாக்டர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலுசிவலிங்கம், சிவகாசி மாவட்ட சுகாதார அலுவலர்: சிவகாசி பகுதியில்உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெப்ட்டேஷன் அடிப்படையில் ஒரு டாக்டராவது பணியில் உள்ளார்.

விரைவில் 2200 டாக்டர்கள் புதிதாக பணியமர்த்தப்பட உள்ளனர். அப்போது அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us