ADDED : ஜூன் 10, 2024 06:14 AM
விருதுநகர் : விருதுநகர் ஏ.என்.டி., அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற, எச்.ஐ.வி., பாதிப்புக்குள்ளானவர்களின் குழந்தைகளுக்கு பள்ளி செல்ல தேவையான பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜெயராஜசேகர் தலைமையில் நடந்தது.
எச்.ஐ.வி., உள்ளூர் நலச்சங்க அலுவலகம், விருதுநகர் ஐலாண்ட் ஆப் ஹோப் ஆதரவற்ற பெண் குழந்தைகள் காப்பகத்தில் 80 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.