Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

ADDED : ஜூலை 10, 2024 06:55 AM


Google News
மூவர் தற்கொலை

விருதுநகர்: வீரபத்திரன் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து 47. இவர் விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பாஸ்ட்புட் கடை நடத்தினார். இவர் ஜூலை 7 இரவு 9:00 மணிக்கு துாங்க சென்று ஜூலை 8 காலை நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. உறவினர்கள் மதியம் 12:00 மணிக்கு வீட்டை திறந்து பார்த்த போது துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

சாத்துார்: சாத்துார் மேட்டமலை சேர்ந்தவர் முத்துமாரி, 49. கூலித் தொழிலாளி. முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தவர் வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

சிவகாசி: சிவகாசி மீனம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன் 61. வயிற்று வலியால் அடிக்கடி அவதிப்பட்டு வந்த இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us