Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

ADDED : ஜூன் 26, 2024 07:34 AM


Google News
டூவீலர்கள் திருட்டு

விருதுநகர்: வாடியான் தெருவைச் சேர்ந்தவர் பிரவின்குமார் 33. இவர் டூவீலரை ஏப் 23 அதிகாலை 1:40 மணிக்கு வீட்டின் வாசல் முன்பு நிறுத்திவிட்டு மதியம் 1:00 மணிக்கு வந்து பார்த்த போது திருடு போனது தெரிந்தது. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

அதே போல திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் சந்தனக்குமார் 20. இவர் டூவீலரில் திருப்பூரில் இருந்து கல்லிடைக்குறிச்சி செல்வதற்காக ஜூன் 14 அதிகாலை 3:00 மணிக்கு விருதுநகர் - சாத்துார் நான்கு வழிச்சாலைக்கு வந்தார். அப்போது டூவீலரை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிப்பதற்காக சென்று திரும்ப வந்து பார்த்த போது டூவீலர், பவுச்சில் வைத்திருந்த செல்போன் திருடு போனது தெரிந்தது. சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஊருணியில் மிதந்த ஆண் பிணம்

விருதுநகர்: கூரைக்குண்டைச் சேர்ந்தவர் கருப்பசாமி 45. இவர் ஜூன் 23 மது குடித்து விட்டு மாலை 4:00 மணிக்கு வீட்டுக்கு வந்தவர் இரவு வீட்டில் தங்காமல் வெளியே சென்றார். இவர் ஜூன் 24 மாலை 4:30 மணிக்கு ஊருணியில் இறந்த நிலையில் கிடந்தார். சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.

மின்கசிவால் வீடு எரிந்து சேதம்

விருதுநகர்: செங்கோட்டை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் 38. இவரின் வீடு ஜூன் 22 மாலை 5:00 மணிக்கு மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர்.ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

பாலியல் சீண்டல்: வாலிபர் கைது

விருதுநகர்: விருதுநகர் இந்திராநகரைச் சேர்ந்தவர் முத்து 45. இவரின் கணவர் சிவலிங்கம் இறந்து விட்டதால் சித்தாள் வேலை செய்து வருகிறார். இரு மகன்களும் வெளியூரில் வசிக்கின்றனர்.

இந்நிலையில் முத்து ஜூன் 24 அதிகாலை 3:00 மணிக்கு காற்றோட்டத்திற்காக வீட்டை திறந்து வைத்து துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது இவரின் வீட்டிற்குள் நுழைந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் தீபக் 20, பாலியல் சீண்டல் செய்துள்ளார். மேற்கு போலீசார் தீபக்கை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us