Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ராஜபாளையத்தில் லலிதா ஜுவல்லரி புதிய ஷோரூம் திறப்பு விழா

ராஜபாளையத்தில் லலிதா ஜுவல்லரி புதிய ஷோரூம் திறப்பு விழா

ராஜபாளையத்தில் லலிதா ஜுவல்லரி புதிய ஷோரூம் திறப்பு விழா

ராஜபாளையத்தில் லலிதா ஜுவல்லரி புதிய ஷோரூம் திறப்பு விழா

ADDED : ஜூலை 10, 2024 09:21 PM


Google News
Latest Tamil News
ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் காந்தி கலை மன்றம் அருகே லலிதா ஜுவல்லரி 54 வது ஷோரூம் திறப்பு விழா நடந்தது.

ராஜபாளையம் மில்ஸ் நிர்வாக இயக்குனர் நிர்மலா ராஜா குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். லலிதா ஜுவல்லரி, தலைவர் - நிர்வாக இயக்குனர் கிரண் குமார் வரவேற்றார்.

அடையார் ஆனந்த பவன் ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர்கள் வெங்கடேச ராஜா, ஸ்ரீனிவாச ராஜா, எம்.பி., ராணி, எம்.எல்.ஏ., தங்கபாண்டியன், நகராட்சி தலைவர் பவித்ரா , அடையார் ஆனந்த பவன் லலிதா, ஆனந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். .

லலிதா ஜுவல்லரி நிர்வாக இயக்குனர் கிரண் குமார் கூறியதாவது:

துவக்க விழா சலுகையாக ஜூலை 17 வரை சேதாரத்தில் மேலும் ஒரு சதவீதம் குறைவு , வைர நகைகள் கேரட்டுக்கு ரூ. 4000 குறைவு. தங்கம் மட்டுமன்றி வைர நகைகளையும் மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது.

நெக்லஸ், செயின்கள், வளையல்கள், தோடுகள், ஒட்டியானம் என விதவிதமான ஆபரணங்கள் , கொல்கத்தா விக்ரகம், ஆன்ட்டிக், போல்கி, லைட் வெயிட், கேரளா எத்தினிக் டிசைன்களில் வைக்கப்பட்டுள்ளன. வைர நகைகளுக்கென்று தனிப்பிரிவு உள்ளது.

இது தவிர 11 மாத நகை வாங்கும் திட்டம் இதில் நுாறு சதவீதம் சேதாரம் கிடையாது. 99 சதவீதம் வெள்ளிப் பொருட்களுக்கு சேதாரம் இல்லை என அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us