ADDED : ஜூலை 12, 2024 04:07 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தளவாய்புரம் நல்ல மங்கலத்தை சேர்ந்தவர் இறைவன் 43, இவர் ராஜபாளையம், ஆலங்குளம் போலீஸ் ஸ்டேஷன்களில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதால் எஸ். பி., பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையில் இறைவனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார். இதையடுத்து இறைவன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.