/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா
மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா
மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா
மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா
சிவகாசி
* சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் கல்வி வட்டம் சார்பில் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டி நடந்தது. கல்லுாரி தலைவர் திலகவதி, செயலர் அருணா புரவலர்களாக வழி நடத்தினர். கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து நடந்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில்உதவி பேராசிரியர் செல்வ ஈஸ்வரி வரவேற்றார். இணை பேராசிரியர் உமா சங்கரி பேசினார். உதவி பேராசிரியர் முத்து காயத்ரி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்வி வட்ட ஒருங்கிணைப்பாளர் வளர்மதி செய்தார்.
ஸ்ரீவில்லிபுத்துார்
ஸ்ரீவில்லிபுத்துார் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ.பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. தாளாளர் குருவலிங்கம் தலைமை வகித்தார். பள்ளி அறங்காவலர் சித்ரா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
ராஜபாளையம்
* ராஜபாளையம் அன்னப்ப ராஜா மேல்நிலை பள்ளி செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை விதித்தார். தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.
சாத்துார்
* சாத்துார் மேட்டமலை பி.எஸ்.என்.எல்.பி.எட்., கல்லுாரியில் காமராஜர் பிறந்த தின விழா நடந்தது தலைவர் ராஜூ தலைமை வகித்தார். செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்றார் மாணவ ஆசிரியர் கார்த்திக்குமார் காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார். மாணவ ஆசிரியர் வித்தியா நன்றி கூறினார்.