Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ செஞ்சிலுவை சங்க உறுப்பினராக  அழைப்பு 

செஞ்சிலுவை சங்க உறுப்பினராக  அழைப்பு 

செஞ்சிலுவை சங்க உறுப்பினராக  அழைப்பு 

செஞ்சிலுவை சங்க உறுப்பினராக  அழைப்பு 

ADDED : ஜூலை 14, 2024 03:58 AM


Google News
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:இந்திய செஞ்சிலுவை சங்க தமிழ்நாடு மாநில கிளையின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த இந்திய செஞ்சிலுவை சங்கம் 2018 முதல் பல்வேறு காரணங்களால் அதன் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டிருந்தது.

தற்போது இக்கிளையின் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தவும், புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே விருதுநகர் கிளை செஞ்சிலுவை சங்த்தின் முன்னாள் ஆயுட்கால உறுப்பினர்கள் யாரேனும் புதிய நிர்வாகிகள் தேர்வில் கலந்து கொள்ள விரும்பினால் விருதுநகர் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தை தொடர்வு கொள்ளவும்.

மேலும் புதிய ஆயுட்கால உறுப்பினர்கள் சேர்க்கையும் நடைபெறுவதால் விருப்பமுள்ள தன்னார்வலர்கள் தங்களது சுய விபரங்களோடு விருதுநகர் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தை நேரில் அணுகி விபரங்களை பெற்றுக் கொள்ளலாம், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us