ADDED : ஜூலை 14, 2024 03:57 AM
விருதுநகர்,: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:
மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களின் மனைவி அல்லது விதவை அல்லது திருமணமாகாத மகள்கள், தையல் பயிற்சி முடித்து உரிய சான்று பெற்று அப்பயிற்சி நிறுவனத்தின் மூலம் தையல் இயந்திரம் பெறாமல் இருந்தால் ஜூலை 25க்குள் ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள விருதுநகர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம், என்றார்.