/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ முழுமை பெறாத பாதாள சாக்கடை இணைப்பு பணி முழுமை பெறாத பாதாள சாக்கடை இணைப்பு பணி
முழுமை பெறாத பாதாள சாக்கடை இணைப்பு பணி
முழுமை பெறாத பாதாள சாக்கடை இணைப்பு பணி
முழுமை பெறாத பாதாள சாக்கடை இணைப்பு பணி
வேர்களால் பாதிப்பு
நந்தினி, குடியிருப்பாளர்: நேதாஜி ரோடு அங்கன்வாடி மையம் அருகே உள்ள விநாயகர் கோயில் ஒட்டி வளர்ந்துள்ள 50 ஆண்டுகளான அரசமரத்தின் வேர்கள் சுற்றியுள்ள குடியிருப்புகளின் சுவர்களையும் குடி நீர் தொட்டிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அகற்ற கோரிக்கை வைத்துள்ளோம்.
சுகாதாரக் கேடு
செல்ல பாண்டியன், குடியிருப்பாளர்: குடியிருப்புகள் இடையே பல பகுதிகளில் சாக்கடை மண்மேவியும் குப்பையும் சேர்ந்து கழிவுகளுடன் சாக்கடை தேங்கி பாதிக்கிறது. இவற்றில் நமக்கு நாமே என்பது போல பணியாளர்களை எதிர்பார்க்காமல் களத்தில் இறங்க வேண்டியுள்ளது. புழு உற்பத்தியாவதால் சுகாதாரத்தை எதிர்பார்க்கிறோம்.
தடுமாறும் வாகனங்கள்
சுரேஷ், குடியிருப்பாளர்: கோதண்டராமர் கோயில் ஒட்டிய தெருவில் மெயின் ரோட்டிற்கு செல்லும் சாக்கடை தரைப்பாலம் ரோட்டை விட அதிகமாக உயர்த்தியதால் சிறிய வாகனங்கள் தடுமாற்றத்திற்கு உள்ளாகிறது. வீட்டை ஒட்டியுள்ள காலி இடத்தில் கழிவுகள் கொட்டி வருவதை தடுக்க வேண்டும்.
புதரால் அச்சம்
இசக்கிமுத்து, குடியிருப்பாளர்: மங்காபுரம் தெரு, உப்பு கிணறு பகுதி மந்தையில் புதர் மண்டி கிடக்கிறது. இவற்றை அகற்ற கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. விஷ ஜந்துக்கள் பதுங்குவதற்கு தோதாக உள்ளதுடன் பகல் நேரங்களில் இதனால் கொசுக்கடிக்கு ஆளாகி வருகிறோம். சுகாதாரமாக வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.